வக்காலத்து வாங்கி, டோஸ் வாங்கிய நடிகர்..

Is actor Prasanna decides to quit social media

வாய்மூடிப் பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், நடிகையர் திலகம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மலையாள பட நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாளத்தில் நடித்துத் தயாரித்த ஒரு படத்தில் பிரபாகரன் என்ற பெயர் கேலி செய்யப்பட்டு இருப்பதாகப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து துல்கர் சல்மான் தமிழ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் வேண்டுமென்று அந்த பெயரைப் பயன்படுத்தவில்லை பழைய மலையாள படமொன்றில் இப்படி காட்சி வரும் அந்த நினைவில் இக்காட்சி வைக்கப்பட்டது. எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில் நடிகர் பிரசன்னா குறுக்கே புகுந்து துல்கருக்கு ஆறுதல் கூறியதுடன் வக்காலத்து வாங்கி பேசினார். அவரது செயல் தமிழ் ரசிகர்களைக் கோபத்தில் ஆழ்த்தியது. அவர்கள் பிரசன்னாவுக்கு டோஸ் விட்டதுடன் இணைய தள பக்கத்திலிருந்து அவர் வெளியேற வேண்டும் என்று கூறினார்கள். அதை ஏற்காத பிரசன்னா, 'நான் துல்கருக்கு ஆறுதல் கூறியதில் தவறில்லை எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். இணைய தளத்திலிருந்து வெளியேற மாட்டேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.

You'r reading வக்காலத்து வாங்கி, டோஸ் வாங்கிய நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சந்திரமுகி 2 வேட்டையன் கதையாக உருவாகிறது.. சந்திரமுகியாக ஆகப்போவது யார்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்