பாரதிராஜாவுக்கு 3 ஊர்களில் கொரோனா பரிசோதனை.. வீடியோவில் விளக்கம் அளித்தார்..

three times corona test to bharathiraja

இயக்குனர் பாரதிராஜா தேனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வீடியோவில் தோன்றி பேசி பாரதிராஜா விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது:இயக்குனர் பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டார் என்று ஊடகங்களில் பரபரப்பாக செய்தி பரப்பப்படுகிறது. அவர்களுக்கு எதாவது பரபரப்பு தேவைப் படுவதால் இப்படி செய்கிறார்கள். உண்மையில் நடந்தது என்ன?
தேனியில் எனது சகோதரி உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார்.அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரை பார்ப்பதற்காக தேனி வந்தேன்.

சென்னையிலிருந்து புறப்படும்போதே எனக்குச் சுகாதாரத் துறையினர் பரிசோதனை செய்தார்கள், வழியில் ஆண்டிபட்டியில் பரிசோதனை செய்தார்கள் தேனி வந்தவுடன் நானே சுகாதாரத் துறையினரை அழைத்துப் பல மாவட்டங்களை கடந்து வந்ததால் பரிசோதனை செய்யச் சொன்னேன். எல்லா வற்றிலும் நெகட்டிவ் என்று வந்தது அதனால் என்னைச் செல்ல அனுமதித்தனர் 'என்றார்.

You'r reading பாரதிராஜாவுக்கு 3 ஊர்களில் கொரோனா பரிசோதனை.. வீடியோவில் விளக்கம் அளித்தார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தேனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பாரதிராஜா.. என்ன காரணம்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்