அருண்விஜய் நடிப்பது அஞ்சாதே இரண்டாம் பாகமா? மிஷ்கின் வட்டாரம் ரிப்ளை..

கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியாபடத்தில் நடித்த அருண்விஜய் அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒருவரையொருவர் நேரில் சந்திக்காமல் செல்போன், வீடியோ காலில் பேசியே இந்த படத்தின் கதையைக் கேட்டு கால்ஷீட் தந்திருக்கிறார் அருண்.

மிஷ்கின் இயக்கத்தில் அருன்விஜய் நடிப்பது அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகம் என்று தகவல் பரவியது. அப்படத்தில் நரேன் ஏற்று நடித்த பாத்திரத்தில் அருண்விஜய் நடிக்கிறார் மற்றொரு பாத்திரமான அஜ்மல் பாத்திரத்தில் நடிக்கும் நடிகருடன் பேச்சு நடக்கிறது என்றும் கூறப்பட்டது.
இதுபற்றி மிஷ்கின் தரப்பில் விசாரித்தபோது, அருண்விஜய் நடிக்கும் படம் அஞ்சாதே படத்தின் 2ம்பாகம் கிடையாது. ஆனால் அதேபோல் இது ஆக்‌ஷன் கலந்த கதையாக இருக்கும் என்றனர்,
அருண்விஜய் ஏற்கனவே பாக்ஸர், அக்னி நட்சத்திரம், சினம் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர அறிவழகன் இயக்கும் படத்திலும் நடிக்கிறார்.

You'r reading அருண்விஜய் நடிப்பது அஞ்சாதே இரண்டாம் பாகமா? மிஷ்கின் வட்டாரம் ரிப்ளை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டாட்டூபோட்டு நடிப்பதென்றால் அல்வா சாப்பிடுவதுபோலத்தான்.. டாப்ஸி சொல்கிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்