ஆகஸ்ட்டில் விஜய்சேதுபதி, நயன், சமந்தா பட ஷூட்டிங்.. டைரக்டர் விக்னேஷ் சிவன் திட்டம்..

Kaathu Vaakula Rendu Kaadhal to start rolling from August

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் புதிய படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தை விக்னேஷ் சிவன் டைரக்டு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்குகிறது. இதனை பட தயாரிப்பாளர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் உறுதி செய்திருக்கிறார். விகேஷ்சிவனின் ரவுடி பிக்சர்ஸும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இதுவொரு ரொமான்டிக் காதல் கதையாக உருவாகவிருக்கிறது.ஆகஸ்ட் மாதத்துக்குள் கொரோனா தடைகாலம் முடிந்து வழக்கமான முறையில் படப்பிடிப்புகள் தொடங்குமென்று கோலிவுட்டில் பேச்சு நிலவு கிறது. அதன் அடிப்படையில் படப்பிடிப்பு திட்டங்களை தயாரிப்பாளர்கள் வகுத்து வருகின்றனர்.

You'r reading ஆகஸ்ட்டில் விஜய்சேதுபதி, நயன், சமந்தா பட ஷூட்டிங்.. டைரக்டர் விக்னேஷ் சிவன் திட்டம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பர்கர் தயாரிக்கும் ஹீரோவை பாராட்டிய நடிகர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்