தலைவன் இருக்கிறான் பட பாடல் பதிவில் பூஜாகுமார்.. கமல், விஜய்சேதுபதி, ரஹ்மான் இணையும் படம்..

poojakumar met Kamal and Rahman during composition sessions for Thalaivan Irukkiran

சிவாஜி, கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் தேவர் மகன். இப்படத்தின் 2ம் பாகம் தலைவன் இருக்கிறான் என்ற பெயரில் உருவாகிறது. இப்படத்தை கமல்ஹாசன் இயக்கி நடிக்கிறார். முதல் பாகத்தில் கமலுக்கு வில்லனாக நாசர் நடித்தார். அந்தப் பாத்திரம் முதல் பாகத்திலேயே கொல்லப்படுவது போல் அமைக்கப்பட்டது. இதனால் இரண்டாம் பாகத்தில் நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். கமலும் ,நாசரும் முதல் பாகத்தில் மோதிக் கொண்டதுபோல் கமலும், விஜய் சேதுபதியும் இரண்டாம் பாகத்தில் மோதிக் கொள்வார்கள் என்று தெரிகிறது. கடந்த 2 வருடமாக நடிக்காமல் ஒதுங்கியிருக்கும் வடிவேலு தலைவன் இருக்கிறான் படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.


கதாநாயகிகளாக ரேவதி. ஆண்ட்ரியா, பூஜா குமார் நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இதனை பூஜாகுமார் மறுத்திருக்கிறார். அவர் கூறும்போது,தலைவன் இருக்கிறான் படத்தில் நான் நடிக்கவில்லை. என்னை இதுவரை அப்படத்தில் நடிக்கக் கேட்கவில்லை. ஆனால் வாய்ப்பு வந்தால் அதை மறுக்க முடியாது. இப்படத்தின் பாடல் கம்போஸிங் நடந்தபோது கமல் சார். ரஹ்மான் ஆகியோருடன் நானும் இருந்தேன் என்றார் பூஜாகுமார்.

You'r reading தலைவன் இருக்கிறான் பட பாடல் பதிவில் பூஜாகுமார்.. கமல், விஜய்சேதுபதி, ரஹ்மான் இணையும் படம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - துணை முதல்வர் ஓ.பி.எஸ்.. மருத்துவமனையில் அட்மிட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்