அனுஷ்கா படத்தை தியேட்டரில் வெளியிடுங்கள்.. தணிக்கை அதிகாரி அட்வைஸ்..

Nishabdham clears censor formalities

அனுஷ்கா, அஞ்சலி மாதவன் நடித்துள்ள தெலுங்கு படம் நிசப்தம். இப்படம் தமிழில் சைலன்ட் என்ற பெயரில் வெளியாகிறது. தியேட்டர்கள் கொரோனா தடையால் மூடப்பட்டிருப்பதால் இப்படம் ஒ டி டி தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் தணிக்கை முடிந்துள்ளது படத்துக்கு யூ /ஏ சான்று வழங்கப்பட்டுள்ளது.


நிசப்தம் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'இப்படத்தை தியேட்டரில் வெளியிடுங்கள்' என்று இயக்குனருக்கு அட்வைஸ் தந்திருக்கின்றனர். இது பற்றிப் பட இயக்குனர் ஹேம்நாத் மதுக்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜில், 'நிசப்தம் படத்தைப் பார்த்து தணிக்கை அதிகாரிகள் பாராட்டினார்கள். அத்துடன் இப்படத்தை முதலில் தியேட்டரில் வெளியிடும்படி கேட்டுக் கொண்டனர்.அவர்களுடைய அறிவுரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி' எனக் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து நிசப்தம் படம் முதலில் தியேட்டரில் வருமா, ஒ டி டி தளத்தில் வெளியாகுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

You'r reading அனுஷ்கா படத்தை தியேட்டரில் வெளியிடுங்கள்.. தணிக்கை அதிகாரி அட்வைஸ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்காவில் கொரோனா பலி ஒரு லட்சம் தாண்டியது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்