ரீமேக் படத்தில் நடிக்கவில்லை.. ஆர்யா விளக்கம்..

I am not a part of Ayyappanum Kowshiyum Tamil remake, says Arya

பிற மொழிகளில் வெற்றி பெற்ற படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் பல படங்கள் தமிழில் ரீமேக் ஆகியிருக்கின்றன. அஜித் குமார் நடித்த 'நேர் கொண்ட பார்வை 'இந்தியில் வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக் ஆகும். அது போல் மலையாளத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்த 'ஐயப்பனும் கவுஷியும்' படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. இதில் சசிகுமார், ஆர்யா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை ஆர்யா மறுத்திருக்கிறார். அவர் கூறும்போது, 'ஐயப்பனும் கவுஷியும்' தமிழ் ரீமேக்கில் நான் நடிக்கவில்லை என்றார்.


ஆர்யா அடுத்து பா. ரஞ்சித் இயக்கும் 'சல்பேட்டா பரம்பரை' படத்தில் நடிக்க உள்ளார். இதற்காக அவர் தனது உடற்கட்டைக் கட்டு மஸ்தாகி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

You'r reading ரீமேக் படத்தில் நடிக்கவில்லை.. ஆர்யா விளக்கம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அனுஷ்கா படத்தை தியேட்டரில் வெளியிடுங்கள்.. தணிக்கை அதிகாரி அட்வைஸ்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்