25 வயது டிவி நடிகை தூக்குப் போட்டு தற்கொலை... மன அழுத்தம் காரணம்?

25 year old TV actress commits suicide

மேரி துர்கா, கிரைம் பேட்ரோல். ஆல் இஷக் போன்ற இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர். பிரக்ஷா மேத்தா. 25 வயதே ஆகும் இவர் மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஹிரன்நகர் போலீஸ் அதிகாரி கூறும்போது, 'தற்கொலை செய்து கொண்டவர் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார்.


அதில் மிகுந்த மன அழுதத்தில் இருந்ததாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது ' என்றார். பாய்பிரண்டுடன் ஏற்பட்ட காதல் தோல்வியாலும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

You'r reading 25 வயது டிவி நடிகை தூக்குப் போட்டு தற்கொலை... மன அழுத்தம் காரணம்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அஜீத் கதாநாயகி தனிமைப்படுத்தப்பட்டார்.. அதிகாரிகள் அறிவுறுத்தல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்