லாக்டவுனுக்கு பிறகு வரும் 3 ஹீரோ, 3 ஹீரோயின்கள் படம் ரிலீஸ்.. வெங்கட் பிரபு திட்டம்..

Venkat Prabhus Party film to hit the screens in September

சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை இயக்கி வருகிறார் டைரக்டர் வெங்கட் பிரபு. கொரோனா லாக் டவுனால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக பார்ட்டி என்ற படத்தை இயக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. இதில் ஜெய், சிவா, சந்திரன் என 3 ஹீரோக்கள் ரெஜினா, சஞ்ஜிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

மேலும் முக்கிய வேடங்களில் சத்யராஜ், ஜெயராம் சுரேஷ், சம்பத்ராஜ், ரம்யாகிருஷ்ணன், நடிக்கிறார்கள். இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்திருகிறார்.மே மாதம் இப்படத்தை வெளியிட எண்ணியிருந்தனர். லாக்டவுனால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. வரும் செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட எண்ணி உள்ளனர்.

You'r reading லாக்டவுனுக்கு பிறகு வரும் 3 ஹீரோ, 3 ஹீரோயின்கள் படம் ரிலீஸ்.. வெங்கட் பிரபு திட்டம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சமந்தாவிடம் பூஜா மன்னிப்பு கேட்க வேண்டும்.. ரசிகர்கள் திடீர் போர்க்கொடி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்