ஷூட்டிங் அனுமதி கேட்டு கில்டு நிர்வாகிகள் அமைச்சரிடம் மனு..

Guild executives asking for permission to shoot Petition to the Minister

தென்னிந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவை சங்கத் தலைவர் ஜாகுவார் தங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பி. ரங்கநாயக்கலு, பா.ரஞ்சித் குமார், எம்.சி. சேகர், ஜே மணிமாறன், டி நாகலிங்கம், டி . சதா சிவமூர்த்தி, பி. தயாநந்தன் ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர்.

திரைப்படங்களுக்குப் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரியும், மேலும் சிறு படங்களுக்கான மானியம் கொடுக்க புளூரே டிஸ்க், ஹார்ட் டிஸ்க், கட்டணம் செலுத்தும் கால அவகாச தேதியை நீட்டித்து அறிவிக்கவும், மேலும் மானியத்தொகையை உடனடியாக வழங்கி சிறுபட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிட கேட்டும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

You'r reading ஷூட்டிங் அனுமதி கேட்டு கில்டு நிர்வாகிகள் அமைச்சரிடம் மனு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாட்டில் ஒரே நாளில் 8909 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்