அனிருத் நடிக்க வந்தால் முதல் படத்தை நான் தயாரிப்பேன்.. பிரபல நடிகர் விருப்பம்..

Popular Actor will Produce Anirudhs first film as hero

இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி .வி.பிரகாஷ் நடிகர்களாகி விட்டனர். அவர்களைத் தொடர்ந்து அனிருத்தும் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இசை அமைப்பதோடு நிறுத்திக்கொண்டார். இசை ஆல்பங்களில் அவ்வப்போது நடிக்கிறார். இந்நிலையில் அனிருத் நடிக்க வந்தால் முதல் படத்தை நான் தயாரிப்பேன் என்கிறார் பிரபல நடிகர்.


அனிருத் படத்தைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்திருப்பவர் வேறு யாருமல்ல அவரது நெருங்கிய நண்பர் சிவகார்த்திகேயன். அவர் வெளியிட்டுள்ள மெசேஜில்.அனிருத் எப்போதாவது நடிக்க வந்தால் அவர் நடிக்கும் முதல் படத்தை நான் தயாரிப்பேன் என்றார். சிவகார்த்திகேயனின் இந்த மெசேஜை பார்த்த கோலமாவு கோகிலா டைரக்டர் நெல்சன் திலீப் குமார், அனிருத் நடிக்கும் அந்த படத்தை நான்தான் டைரக்டு செய்வேன் என்றார்.

You'r reading அனிருத் நடிக்க வந்தால் முதல் படத்தை நான் தயாரிப்பேன்.. பிரபல நடிகர் விருப்பம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தனுஷுக்கு ஜோடியாகிறார் மணிரத்னம் நாயகி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்