உயிர் கொடுக்க துணிந்த ரசிகையிடம் சத்தியம் கேட்ட நடிகை..

Actress Aishwarya Rajesh beg promise from her fans ..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருப்பூரிலிருந்து ஒரு ரசிகை இணையத் தளத்தில் ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் ஹலோ ஐஸ்வர்யா அக்கா நான் உங்களின் பெரிய ரசிகை. உங்களுக்காக உயிரையும் கொடுப்பேன். நீங்கள் நடிப்பின் அடையாளம். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். உண்மையில் உங்கள் மீது நான் மிகுந்த அன்பு வைத்திருக்கிறேன் அக்கா எனத் தெரிவித்திருக்கிறார்.


உயிரைக் கொடுப்பேன் என்ற ரசிகையின் மெஜேஜை கண்டு அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா ,நன்றி. நீங்கள் அதுபோன்ற வார்த்தை கூறக்கூடாது உங்களை எனது தோழியாக ஏற்றுக் கொள்கிறேன். தன்னுடைய உயிரை வேறு யாருக்காகவும் ஒரு போதும் தரக் கூடாது. உயிர் யாருக்காகவும் இழப்பதற்காக அல்ல. அப்படி ஒருபோதும் சொல்லாதீர்கள். உங்களைப்போன்ற உண்மையான ரசிகையைப் பெற்றதில் மகிழ்ச்சி. என்றைக்கும் நான் உங்களுக்கு உற்ற தோழியாக இருப்பேன். அதுபோன்ற வார்த்தைகளைப் பேச மாட்டேன் என்று நீங்கள் எனக்குச் சத்தியம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

You'r reading உயிர் கொடுக்க துணிந்த ரசிகையிடம் சத்தியம் கேட்ட நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - துணிச்சலானவள், குழப்பமானவள்.. பெண்குயின்.. அனுபவம் சொல்கிறார் கீர்த்தி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்