சுஷாந்த் சிங் மரணம் நடிகர், கேர்ள் ஃபிரண்டிடம் விசாரிக்க முடிவு.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..

Sushant Singh Rajput suicide:Actor and Gir, friend statements will be recorded

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் அவரது தாய் மாமன் சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியிருப்பதுடன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உள்ளார். அதேபோல் பீகாரைச் சேர்ந்த ஜன் அதிகார கட்சி தலைவர் பப்பு யாதவ் சிபிஐ விசாரணை கோரி உள்ளார்.


இந்நிலையில் மும்பை போலீசார் விசாரணை முடக்கி விட்டுள்ளனர். சுஷாந்தின் நெருங்கிய நண்பரும். டிவி நடிகருமான மகேஷ் ஷெட்டியிடமும், சுஷாந்த் கேர்ள் ஃபிரண்ட் ரெஹிய சக்ரபோர்த்தியுடனும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சுஷாந்த் இறப்பதற்கு முன் மகேஷ் ஷெட்டிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அதற்குப் பதில் தரப்படவில்லை.இதனால் மகேஷிடம் விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையில் மகேஷ் ஷெட்டியின் சார்பில் அவரது குழு வெளியிட்டுள்ள அறிக்கை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தால் மகேஷ் ஒரு சகோதரரை இழந்தார், அவரது இழப்பால் துக்கம் அடைந்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ் புத்தின் அகால மரணத்தால் அனைவரும் மிகுந்த வேதனையுடனும் அதிர்ச்சியுடனும் இருக்கிறோம். மகேஷ் ஷெட்டியின் தனியுரிமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டுகிறோம். மீடியாக்கள் அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுஷாந்த் மரணம், தூக்கிட்டதில் மூச்சு திணறி இறந்ததாக போஸ்மார்டம் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.

You'r reading சுஷாந்த் சிங் மரணம் நடிகர், கேர்ள் ஃபிரண்டிடம் விசாரிக்க முடிவு.. போலீஸ் அதிரடி நடவடிக்கை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுஷாந்த் சிங் மரணம் தீபிகா படுகோனே கோபம்.. தற்கொலையால் சாகடிக்கப்படுகிறார்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்