எங்கிருந்தாலும் என் நண்பர்.. சுஷாந்த் பற்றி பிரியங்கா உருக்கம்..

Priyanka Chopra remembers Sushant Singh Rajput

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்குப் பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகை பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ள மெசேஜில் ,நான் அதிர்ச்சியில் உறைந்தேன். நீ (சுஷாந்த்)நிச்சயம் மன வலியிலிருந்திருக்க வேண்டும். நீ அமைதி அடைந்திருப்பாய் என நம்புகிறேன். நீ எங்கிருந்தாலும் எனது நண்பர். சீக்கிரமே சென்றுவிட்டாய். சூரிய உதயத்தின் போது ஏற்படும் பவுதீக மாற்றம் பற்றி நாம் இருவரும் உரையாடியதை என்னால் ஒரு போதும் மறக்கமுடியாது. வார்த்தைகள் வராமல் துக்கம் தொண்டையை அடைக்கிறது. அவரது இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவிக்கிறேன்.இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறி உள்ளார்.

You'r reading எங்கிருந்தாலும் என் நண்பர்.. சுஷாந்த் பற்றி பிரியங்கா உருக்கம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுஷாந்த் சிங் மரணம் நடிகர், கேர்ள் ஃபிரண்டிடம் விசாரிக்க முடிவு.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்