சுஷாந்த் சிங் மரணச் செய்தி கேட்டு உறவுக்கார பெண் அதிர்ச்சியில் மரணம்.. உடல் தகனம் செய்ததை அறிந்து ஷாக்..

Sushant Singh Rajputs sister-in-law passes away in Bihar

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மும்பையில் உள்ள பவன் ஹான்ஸ் சுடுகாட்டில் நேற்று குடும்பத்தினர் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.சுஷாந்த் சிங் மரணம் திரையுலகினருக்கும், குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்நிலையில் பீகாரில் வாழும் அவரது உறவுக்காரப் பெண் சுதா தேவி என்பவர் (உடன் பிறவா சகோதரர் மனைவி) சுஷாந்த் மரண செய்தி கேட்டு வருத்தத்தில் கடந்த இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் இருந்தார். நேற்று சுஷாந்த் உடல் தகனம் செய்யப்பட்டது என்பதை அறிந்ததும் அதிர்ச்சியில் மரணம் அடைந்தார். சுஷாந்த் இறந்த கவலையில் சுதா தேவி மரணம் அடைந்து விட்டார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.முன்னதாக சுஷாந்த் உடலுக்கு நடிகை கீர்த்தி சனோன், சுஷாந்த் கேர்ள் ஃபிரண்ட் ரெயிஹா சக்ரபோர்த்தி உள்ளிட்ட பலர் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

You'r reading சுஷாந்த் சிங் மரணச் செய்தி கேட்டு உறவுக்கார பெண் அதிர்ச்சியில் மரணம்.. உடல் தகனம் செய்ததை அறிந்து ஷாக்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் முழு ஊரடங்கு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்