தற்கொலை செய்த சுஷாந்திடம் மன்னிப்பு கேட்டு நடிகை கடிதம்,,

Actress Meera Chopra writes Apology Letter To Sushant

கோலிவுட்டில் நடிக்கும் பல நடிகைகள் பாலிவுட்டிலிருந்து வந்தவர்கள். அதில் ஒருவர் தான் நிலா. மீரா சோப்ராவாக இருந்த இவரை கோலிவுட்டுக்கு நிலா எனப் பெயர் மாறி அ ஆ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் எஸ்.ஜே.சூர்யா.நிலா என்கிற மீரா சோப்ரா இந்தி படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார். ஆனால் யாரும் வாய்ப்பு தருவதாக தெரியவில்லை.


சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் பற்றித் திறந்த மடல் ஒன்று எழுதியிருக்கிறார் நடிகை நிலா. அதில் கூறியிருப்பதாவது:நாம் பணியாற்றும் திரையுலகம் மிகவும் கொடூரமானது. கரடுமுரடானது. சுஷாந்த் நீண்ட நாட்களாகவே மன அழுத்ததில் இருந்தது பலருக்கும் தெரியும். அவருக்கு நெருக்கமாக இருந்த இயக்குனர்கள் , நண்பர்கள் ஏன் அவரிடம் பேசி மன அழுத்தத்தை நீக்கவில்லை. வெளியாட்கள் யாரும் பாலிவுட்டில் அவ்வளவு எளிதாக வென்றுவிட முடியாது. ஒரு படம் தோல்வி அடைந்தால் அதன்பிறகு அவரை தீண்டத்தகாதவர் போல் நடத்துவார்கள். நான் இண்டஸ்டிரியில் உள்ளவர்களுக்கு சொல்கிறேன் ஒருவருக்கு தேவைப்படும்போது ஆறுதலாக இருங்கள் அவர் இறந்த பிறகு இரங்கல் தெரிவிப்பதில் என்ன பயனிருக்கிறது. சுஷாந்த் இந்த துறை உன்னை தோல்வி அடையச் செய்துவிட்டது. உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன்
இவ்வாறு நிலா கூறி உள்ளார்.

You'r reading தற்கொலை செய்த சுஷாந்திடம் மன்னிப்பு கேட்டு நடிகை கடிதம்,, Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 5 வருடமாக மன அழுத்ததில் இருக்கும் நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்