ஹீரோ இறுதி சடங்கில் பிரபலங்கள் ஒருவர் கூட கலந்துகொள்ளாதது ஏன்? நடிகை நிகிஷா படேல் காட்டம்..

Nikesha Direct Questions To Bollywood Star For Not Attending Sushants Funeral

என்னமோ ஏதோ, தலைவன், கரையோரம், நாரதன், மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நிகிஷா படேல். சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதற்கு அவரை பாலிவுட் பிரபல நட்சத்திரங்கள் மதிக்காததும், அவருக்கு வந்த பட வாய்ப்புகளைப் பறித்ததும் காரணம் என பாலிவுட் பெரிய நடிகர்கள் மீது பகிரங்கமாகப் பலரும் புகார் கூறி வருகிறார்கள்.

அதுபோல் பாதிக்கப்பட்ட கங்கனா ரனாவத், டாப்ஸி, ஷ்ரத்தா தாஸ். பாயல் ஆகியோர் ஏற்கனவே தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். தற்போது நிகிஷா படேலும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது. பாலிவுட் பிரபலங்களுக்கு நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், சுஷாந்த் சிங் இறுதிச் சடங்கில் பாலிவுட் பிரபல நடிகர்கள் ஒருவர் கூட கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தாதது ஏன்? எல்லோரும் பிஸியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்களா? இப்போது மனிதத் தன்மை எங்குப்போனது எனக் கேட்டிருக்கிறார்.

You'r reading ஹீரோ இறுதி சடங்கில் பிரபலங்கள் ஒருவர் கூட கலந்துகொள்ளாதது ஏன்? நடிகை நிகிஷா படேல் காட்டம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை நிஹாரிகா விரைவில் டும் டும்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்