தற்கொலை செய்த நடிகரின் வாழ்க்கை படம்.. தூண்டியவர் விவரம் வெளிவருமா?

Bollywood Director Announces A Movie On Sushanth

தோனி வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை பாலிவுட்டில் அனைவரையும் உலுக்கியதுடன், வாரிசு ஒற்றுமை, குழுவாதம், பாகுபாடு அதிகார பலம் போன்ற அழுத்தங்களை எதிர்த்து குரல் எழுந்துள்ளது. மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் பற்றி நிறைய அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.


கரண் ஜோஹர், சல்மான் கான் மற்றும் நட்சத்திர குழந்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் பலர் பட்டியலிடுவது சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கோபத்தை அதிகரித்துள்ளது. புதிய திறமையாளர்களை எப்படி தொழில் துறையிலிருந்து வெளியேற்றுகிறார்கள் என்பது பற்றியும் ஆதாரத்துடன் அலசப்படுகிறது. இதற்கிடையில், ஏக்தா கபூர், கரண் ஜோஹர் மற்றும் பலர் மீதான வழக்குகள் மிகப்பெரிய புயலை உருவாக்கியது.

இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் விஜய் சேகர் குப்தா தனது அடுத்த படத்தை சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை மற்றும் அவரது மரணத்திற்கான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்குகிறார். அப்படத்திற்கு 'தற்கொலை அல்லது கொலை? ஒரு நட்சத்திரம் இழந்தது” எனப் பெயரிடப்பட உள்ளது. ஷாமிக் மவுலிக் இயக்கவுள்ளார். இந்த படத்தில் சுஷாந்தை தற்கொலைக்குத் தூண்டியவர்கள் விவரம் வெளியாகும் என்று தெரிகிறது. இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading தற்கொலை செய்த நடிகரின் வாழ்க்கை படம்.. தூண்டியவர் விவரம் வெளிவருமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய் அரசியல் பிரவேசம்: லாக்டவுனில் பெரும் பரபரப்பு.. கமலுடன் கைகோர்ப்பா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்