சுஷாந்த் சிங் போஸ்ட்மார்டம் இறுதி ரிப்போட்.. தூக்கின்போது போராட்டமா?

Sushant Singh Rajput final postmortem report

தோனி வாழ்க்கை படத்தில் நடித்துப் பிரபலமான இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரது பிரேதப் பரிசோதனை (போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்) இறுதி ரிப்போர் போலீஸாருக்கு கிடைத்தது. அதன் விவரம்: சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டதால் இறப்புக்கான காரணம் மூச்சுத்திணறல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது உள்ளுறுப்பு பாதுகாக்கப்பட்டு ரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்காலிக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மூன்று மருத்துவர்கள் கையெழுத்திட்டனர், இறுதி அறிக்கையில் ஐந்து மருத்துவர்கள் கையெழுத்திட்டனர். தடய அறிவியல் ஆய்வகத்தில் வேதியியல் பகுப்பாய்வு செயல்முறையை விரைவுபடுத்த காவல்துறை தடய அறிவியல் சேவைகள் இயக்குனரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடலில் எந்தவிதமான போராட்ட அடையாளங்களும் வெளிப்புற காயங்களும் இல்லை. அவரது நகங்கள் சுத்தமாக இருந்தன. பிரேதப் பரிசோதனை அறிக்கை இது தற்கொலைக்கான தெளிவான வழக்கு என்றும் வேறு எந்த மோசமான மோதல்களும் நடந்ததற்கான அறிகுறி இல்லை என்றும் கூறுகிறது.

You'r reading சுஷாந்த் சிங் போஸ்ட்மார்டம் இறுதி ரிப்போட்.. தூக்கின்போது போராட்டமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சினிமா போஸ்டர் டிசைன்களில் மாற்றம் நிகழ்த்திய சாஃப்ட்வேர்.. டிசைனர் கோபி பிரசன்னா புது முயற்சி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்