மனித உரிமை ஆணையத்தில் நடிகை புகார்...

Actress Sanam Sheddy complaint against sathankulam Incident in Human Rights Commission

சிபி நடித்த வால்டர் மற்றும் அம்புலி, கதம் கதம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு நாள் அழைப்பாளராக பங்கேற்றவர் சனம் ஷெட்டி. இவர் சாத்தன் குளத்தில் போலீஸாரால் தாக்கப்பட்டு இறந்த தந்தை, மகன் கொலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கேட்டு மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

இரண்டு அப்பாவி உயிர்கள் போகக் காரணமாக இருந்த போலீஸார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருப்பதுடன் மற்றவர்களும் இதுபோல் மனித உரிமை ஆணையத்தில் நடவடிக்கை எடுக்கக் கேட்டு புகார் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி.

You'r reading மனித உரிமை ஆணையத்தில் நடிகை புகார்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஷாலின் சக்ரா படத்தின் டிரெய்லரில் மோடி பேச்சு.. என்ன சொல்கிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்