பாடகி இறந்ததாக வதந்தி.. பாடகர் எஸ்,பி,பி கடும் கோபம்..

SP Balasubrahmanyam upset with death hoax of singer S Janaki

பிரபல பாடகி எஸ்,ஜானகி இறந்துவிட்டதாக நேற்று வலைத்தளங்களில் வதந்தி பரவியது. ஆனால் அவர் நலமாக இருப்பதாக அவரது மகன் தெரிவித்தார். இதுபோல் மூன்று முறை கடந்த 2 ஆண்டுகளில் அவரைப்பற்றி வதந்தி பரப்பப்பட்டிருக்கிறது.இதையறிந்து பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கோபமடைந்தார். அவர் கூறும்போது,காலை முதல் எனக்குப் பலபேர் போன் செய்து ஜானகியம்மா பற்றி விசாரித்தனர்.

அவர் இறந்துவிட்டதாக வலைத்தளத்தில் யாரோ வதந்தி பரப்பி உள்ளனர். நான் ஜானகியம்மாவிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் நலமாக இருப்பதாகக் கூறினார். இது என்ன முட்டாள்தனம். என்ன நடக்கிறது. இப்படி ஒரு வதந்தியைப் பரம ரசிகர்கள் நம்பிவிட்டால் என்னாவது. அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. சமூக வலைத்தளத்தை இதுபோல் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. ஜானகியம்மா நீண்ட நாள் வாழ்வார். அவர் பாதுகாப்பாக. நலமாக இருக்கிறார் என்றார்.

You'r reading பாடகி இறந்ததாக வதந்தி.. பாடகர் எஸ்,பி,பி கடும் கோபம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டோலிவுட் ஹீரோவை இயக்குகிறார் அட்லி. பேச்சு வார்த்தை தொடக்கம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்