ரஜினி வில்லனின் நிற பாகுபாடு கிண்டலால் நடிகை அழுகை..

Akshay commented on skin Tone :Actress Actress Shanthi Priya Cried

இந்தி நடிகரும், ரஜினிக்கு வில்லனாகவும் 2.0 படத்தில் நடித்தவர் அக்‌ஷய் குமார். இவருடன், இக்கே பி பக்கா, சவுகாந்த் போன்ற இந்தி படங்களில் ஜோடியாக நடித்தவர் ஷாந்தி பிரியா. அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் எப்போதும் வெயில் கதிர்கள் தாக்காமல் இருப்பதற்காக கிரீம் பயன்படுத்துவேன். ஒருமுறை அக்‌ஷய்குமார் படப் பிடிப்பில் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது எனது கால் முட்டி நிறம் பற்றிக் கிண்டல் செய்தார். அதைக்கேட்டுச் சுற்றியிருந்தவர்கள் சிரித்து விட்டனர். எனக்கு மிகவும் அவமானமாகிவிட்டது, நான் அழுதுவிட்டேன். எனது தோல் நிறத்தால் நான் சினிமாவில் பல நேரங்களில் அவமானப்பட்டிருக்கிறேன் என்றார்.

ஷாந்தி பிரியாவின் இந்த பதிவை பார்த்து பலரும் அக்‌ஷய்குமாரை விமர்சித்து கமெண்ட் வெளியிட்டனர். அதைக்கண்டு அதிர்ச்சியான ஷாந்தி ஒரு விளக்கம் அளித்தார். நான் சொன்னதைப் பலரும் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். அக்‌ஷய்குமார் எப்போதும் என்னிடம் ஜாலியாக, ஜோவியலாக பேசுவார். அவர் என்னைப்பற்றிச் சொன்னது கூட கிண்டலாகவோ, நான் மனவருத்தம் அடைய வேண்டும் என்றோ சொல்லவில்லை என்று நம்புகிறேன். அவரது கடின உழைப்பை நான் மதிக்கிறேன். அவருக்கு அன்பும் , அதிடர்ஷ்டமும் தொடர வாழ்த்துகிறேன் என்றார்.

You'r reading ரஜினி வில்லனின் நிற பாகுபாடு கிண்டலால் நடிகை அழுகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் கடைசி பட ஹீரோயின் வாக்குமூலம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்