மோகன்லால் திரிஷ்யம் 2 ஆகஸ்டில் படப்பிடிப்பு..

Drishyam 2: Mohanlals thriller to go on floors in August

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் கடந்த 2013 ம் ஆண்டு உருவான படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். த்ரில்லர் படமான இது திரைக்கு வந்து 50 கோடி வசூலித்தது. இப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் பெயரில் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. சமீபத்தில் மோகன்லால் 60வது பிறந்த நாளின் போது திரிஷ்யம் 2ம் பாகம் விரைவில் தொடங்கவிருப்பதாகத் தெரிவித்தார். ஜீத்து ஜோசப் ஸ்கிரிப்ட் எழுதி இயக்க முடிவானது. தற்போது ஸ்கிரிப்ட் முடிந்து ஹூட்டிங்கிற்கு தயாராக உள்ளனர்.

இதையடுத்து வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் மாத மத்தியில் மோகன்லால படப் பிடிப்பில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார்.இந்நிலையில் படக் குழுவினரின் கூட்டம் நடக்கிறது. அதில் படப்பிடிப்பின் போது மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், தயாரிப்பு செலவுகள் பற்றியும் முடிவு செய்யவிருக்கின்றனர்.

You'r reading மோகன்லால் திரிஷ்யம் 2 ஆகஸ்டில் படப்பிடிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சாத்தான்குளம் சம்பவம்.. மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணை தள்ளி வைப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்