பொதுமக்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் விசாரிக்கக் குழு.. நடிகர் போஸ் வேண்டுகோள்..

Actor Bose Venkat Request To TamilNadu Chief Minister

கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் போஸ் வெங்கட். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:சாத்தான்குளம் சம்பவத்திற்குப் பிறகு காவல் துறையால் பொதுவெளியில் பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்படும் காணொளி காட்சிகள் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து அதிகமாகப் பகிரப்படுகிறது. இவையெல்லாம் ஏன் முறையாக விசாரிக்கப்படக் கூடாது?இதற்குக் காவல் துறையே ஒரு தனிக்குழு அமைத்து நடந்த சம்பவங்களை முறையாக விசாரித்துத் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். காவல் துறையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.

இவ்வாறு போஸ் வெங்கட் தெரிவித்திருக்கிறார்.

You'r reading பொதுமக்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் விசாரிக்கக் குழு.. நடிகர் போஸ் வேண்டுகோள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா மருந்து ஆய்வு.. ஆக.15ல் முடிவு வெளியாகும்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்