ஜல்லிக்கட்டு காளையை அடக்கப்போகிறார் சூர்யா..

Actor Suriya going to tame Bull in Vetrimaarans film

சூர்யா நகரத்துப் பின்னணி கதைகளிலேயே அதிகம் நடித்திருக்கிறார். இம்முறை அவர் கிராமத்துக் கதைக்களத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதுவும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கதையில் களமிறங்குகிறார்.முதன்முறையாக வெற்றிமாறன் படத்தில் நடிக்கிறார் சூர்யா. கடந்த டிசம்பர் மாதமே இதற்கான அறிவிப்பு வெளியானது. படப்பிடிப்புக்குத் திட்டமிட்டு வந்த நிலையில் கொரோனா லாக்டவுடன் எல்லாவற்றையும் முடக்கிப் போட்டது. கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.


தந்தை மகன் என இரட்டை வேடம் ஏற்க உள்ள இப்படத்துக்கு வாடிவாசல் எனப் பெயரிடப்பட உள்ளதாகத் தகவல் உள்ளது. ஆனால் இன்னும் அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.தந்தை சூர்யா ஜல்லிக்கட்டு மாடி பிடி வீராக நடிக்கிறார்.ஒருவர் இப்போட்டியில் மாடு முட்டி இறக்கிறார் அதன்பிறகு மகன் எடுக்கும் முடிவு என்ன என்பதைக் கொண்டு கதை வடிவமைக்கப்படுவதாகத் தெரிகிறது. முதலில் சூர்யாவின் தந்தையாக நடிக்க சத்யராஜ், ராஜ்கிரண் பெயர்களும் ஆலோசிக்கப்பட்டது. அதன்பிறகு சூர்யாவே அந்த பாத்திரத்துக்கும் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.ஏற்கனவே வாரணம் ஆயிரம், 24 ஆகிய படங்களில் தந்தை மகனாக சூர்யா நடித்திருக்கிறார்.

You'r reading ஜல்லிக்கட்டு காளையை அடக்கப்போகிறார் சூர்யா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாகுபலியை விட 10 மடங்கு அதிக பிரமாண்ட படம்.. ராஜமவுலி புதிய படம் பற்றி மதன்கார்க்கி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்