30 வயது கன்னட நடிகர் தற்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..

Kannada Actor Susheel Gowda Dies By Suicide

சுஷாந்த் சிங் தற்கொலை செய்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் 30 வயது கன்னட நடிகர் சுஷீல் கவுடா நேற்று தற்கொலை செய்து கொண்டார், கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் வசித்து வந்தார் சுஷீல். சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்று கனவு கண்டார். அதற்கு முயற்சித்தபடி டிவியில் நடித்து வந்தார். அரவித் கவுசிக் இயக்கிய 'அந்தா புரா' சீரியலில் கதாநாயகனாக நடித்து பிரபலம் ஆனார்.

பின்னர் கன்னட ஹீரோ துனியா விஜய்யின் வரவிருக்கும் 'சலகா' படத்திலும் சுஷீல் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஒரு போலீஸ்காரர் வேடத்தில் நடித்திருக்கிறார். வருங்காலத்தில் சுஷீல் ஒரு ஹீரோவாக வருவதற்கான தகுதி பெற்றவர் என்று துனியா விஜய் அவரை பாராட்டி இருந்தார். இந்நிலையில் சுஷீலின் தற்கொலை குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த துனியா விஜய், நடிகரின் மரணத்திற்குத் தனது துக்கத்தை வெளிப்படுத்தியதோடு, தற்கொலை என்பது வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளுக்கும் பதில் இல்லை என்று கூறினார்.சுஷீல் ஜிம் பயிற்சியாளராகவும் இருந்து வந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சுஷீலின் தற்கொலை கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

You'r reading 30 வயது கன்னட நடிகர் தற்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்திய ராணுவ வீரர்களுக்கு 89 மொபைல் ஆப்ஸ் பயன்படுத்த தடை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்