துக்ளக் தர்பார் முதல் காட்சியில் நடிக்க நடுங்கினேன்.. மஞ்சிமா மோகன் அனுபவம்..

Actess Manjimaa Mohan Nervous on the first day shoot Of Thghlaq Durbar

கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் மஞ்சிமா மோகன். அடுத்து சத்ரியன். தேவராடம் போன்ற படங்களில் நடித்தார். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ஸ்டில்கள் வெளியிடப்பட்டன. மஞ்சிமா மோகன் தான் நடித்த முதல் காட்சி ஸ்டில்லை வெளியிட்டு அக்காட்சியில் நடிக்க பயந்ததாகக் கூறினார். சாதாரணமாக நடந்து வரும் காட்சியில் நடிக்கப் பயந்தது ஏன் என்பதை விளக்கினார்.


அவர் இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:துக்ளக் தர்பாரில் படத்தில் நான் நடித்த காட்சி என் நினைவில் அப்படியே இருக்கிறது. இது என் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக என் காலில் நின்று நடக்க ஆரம்பித்த போது செய்யும் காட்சி. மிகவும் பதட்டமாக இருந்தேன்.இதற்கு முன்பு இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கவில்லை.நான் ஹூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றவுடன் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் வந்து அந்த காட்சியை எனக்கு விளக்கினார். "நீங்கள் நடக்க வேண்டும் அப்போது முகத்தில் இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார். அது என்னை உலுக்கியது. கால் அறுவை கிசிச்சை முடிந்து மெதுவாக நடக்கும் நேரத்தில் கால் ஊன்றி நடந்து முகத்தில் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது என்று பயந்தேன்.

எனக்குக் கவலையாகிவிட்டது. அதை இயக்குனரிடம் சொன்னேன், ”எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம், உங்களின் இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்தினால் போதும் சிறந்ததைக் கொடுங்கள்” என்றார். அவர் கொடுத்த ஊக்கம் என்னை அந்த காட்சியில் ஒன்றச் செய்தது. அந்த நம்பிக்கையோடு நடித்தேன்.சில சமயங்களில் நாம் எதையாவது முயற்சி செய்யும் வரை அதை நம்மால் செய்ய இயலாது என்று நினைக்கிறோம்
இவ்வாறு மஞ்சிமா மோகன் தெரிவித்தார்.

You'r reading துக்ளக் தர்பார் முதல் காட்சியில் நடிக்க நடுங்கினேன்.. மஞ்சிமா மோகன் அனுபவம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புலம்பெயர் தொழிலாளர்கள் 2000பேருக்கு உதவிய நடிகை...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்