ஷாக்கிங்: ஐஸ்வர்யாராய்க்கும் கொரோனா உறுதி.. கோவிட் 19 டெஸ்ட்டில் பாசிடிவ் என அமைச்சர் தகவல்..

Shocking: Aishwarya Rai Bachchan, Aaradhya test positive for COVID-19

அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக்கிற்குப் பிறகு, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது எட்டு வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கோவிட் -19 டெஸ்ர் செய்ததில் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன், அவரது மகள் ஸ்வேதா நந்தா ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் தொற்று உறுதி ஆகவில்லை. மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் இதைப் பற்றி ட்வீட் செய்துள்ளார், அதில், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா அபிஷேக் பச்சனுக்கும் கோவிட் 19 (கொரோனா) கண்டறியப்பட்டுள்ளனர்.

ஜெயா பச்சன் ஜிக்கு கோவிட் 19 க்கு தொற்று இல்லை.அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன் இரண்டு பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதியான நிலையில் ஜெயா பச்சன், அவரது மருமகள் ஐஸ்வர்யாராய் மற்றும் பேத்தி ஆராத்யா ஆகியோரின் COVID-19 பரிசோதனை அறிக்கைகள் கொரோனா தொற்று இல்லை என முதலில் தெரிவிக்கப்பட்டது. தற்போது வெளிடப்பட்ட புதிய அறிக்கையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்.

You'r reading ஷாக்கிங்: ஐஸ்வர்யாராய்க்கும் கொரோனா உறுதி.. கோவிட் 19 டெஸ்ட்டில் பாசிடிவ் என அமைச்சர் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகைக்கு கடவுள் ஆன பிரபல இயக்குனர்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்