இயக்குனர் மணிரத்னம் புதிய திட்டம் - அதிர்ச்சி தகவல்.. ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்றால் ஹூட்டிங் திட்டம் மாறுமா?
Manirathnam New Plan. Shocking Incident
இயக்குனர் ராஜமவுலி ஒரேயொரு ஈ யை நடிக்க வைத்துக்கூட வெற்றிப்படம் தர முடியும் என்று நான் ஈ படம் மூலம் நிரூபித்தார். பின்னர் பிரமாண்டமாக பாகுபலி படத்தை இயக்கி அளித்தார். இப்படம் 2 பாகங்களாக உருவானது. முதல்பாகம் படமாகிக் கொண்டிருந்தபோதே 2ம் பாகத்தின் 30 சதவீத படப்பிடிப்புகளைச் சேர்த்து எடுத்துவிட்டார். பின்னர் 70 சதவீதம் ஷுட்டிங் நடத்தினால் போதும் என்ற நிலையில் இரண்டாம் பாகத்தை எடுத்து வெளியிட்டார். இரண்டு பாகமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே பாணியை தற்போது மணிரத்னம் கையிலெடுத்திருக்கிறார்.
கல்கியின், பொன்னியின் செல்வன் நாவலை அதே பெயரில் படமாக்கி வருகிறார் மணிரத்னம். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை இரண்டு பாகமாக இயக்குகிறார். முதல் பாகம் படப்பிடிப்பு நடக்கும்போதே 2ம் பாகத்துக்கான பல முக்கிய காட்சிகளை மணிரத்னம் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறார்.
கொரோனா ஊரடங்கால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தடைப்பட்டிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க எண்ணியிருந்த நிலையில் அதிர்ச்சி தரும் தகவலாக ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனவே திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்குமா அல்லது மேலும் தள்ளிப் போகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
You'r reading இயக்குனர் மணிரத்னம் புதிய திட்டம் - அதிர்ச்சி தகவல்.. ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்றால் ஹூட்டிங் திட்டம் மாறுமா? Originally posted on The Subeditor Tamil