நடிகை வனிதா மீது சூரியா தேவி போலீசில் புகார்..

Surya Devi lodges police complaint against Actress Vanitha

நடிகை வனிதா கடந்த மாதம் பீட்டர் பாலை மணந்தார். இந்த திருமணத்தை எதிர்த்து பீட்டர் பால் மனைவி எலிசபெத் போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில் பட அதிபர் ரவீந்தர் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் வனிதா திருமணத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போரூரில் உள்ள எஸ்.ஆர்.எம்.சி போலீஸில் புகார் அளித்தார் வனிதா. அப்போது சூர்யா தேவி மீது போதைப் பொருள் பயன்படுத்துவதாக புகார் அளித்திருந்தார். எனது பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

இதற்கிடையே சூரிய தேவி நேற்று வனிதா மீது வடபழனி போலீஸில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. வனிதா தொடர்ந்து சிறைக்கு அனுப்புவேன் என்று தன்னை மிரட்டுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வனிதா 3வதாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதுபற்றி நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, கஸ்தூரி கருத்து வெளியிட்டனர். அவர்களுக்குப் பதிலடி கொடுத்த வனிதா எனது வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்வேன் தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டிய தில்லை என்று கூறியிருந்தார்.

You'r reading நடிகை வனிதா மீது சூரியா தேவி போலீசில் புகார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனாவிலும் கோடியில் சம்பளம் பெற்ற நயன்தாரா.. மினி ஷூட்டிங்கில் கொட்டும் வருமானம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்