ரம்யா பற்றி விஷால் பட நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு தகவல்...

Vishal Film Factory Statement Regarding Accountant Ramya

நடிகர் விஷால் நிறுவனத்தில் ரூ 45 லட்சம் கையாடல் செய்ததாகக் கணக்காளர் ரம்யா மீது விருகம் பாக்கம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் விஷாலின் பிலிம் பேக்ட்டரி ரம்யா பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:எங்கள் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா, நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பதைக் கண்டறியப்பட்டு 30.06.2020 அன்று காவல் துறையில் புகாரளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7-07-2020 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

எனவே ரம்யா இனி எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியில் பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீறி தொடர்பு வைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading ரம்யா பற்றி விஷால் பட நிறுவனம் வெளியிட்ட பரபரப்பு தகவல்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆசியாவில் செல்வாக்குள்ளவர்கள் பட்டியலில் ரஹ்மான், ஸ்ருதிஹாசன்.. நியூயார்க் பத்திரிகை தேர்வு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்