பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது. கமல்ஹாசன் எச்சரிக்கை...

No paint can be applied on Tamils ​​in divisive maneuvers: Kamal warns

சமீபத்தில் யூ டியூபில் கந்தசஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது. அதற்கு நடிகர்கள் ராஜ் கிரண் உள்ளிட்ட நடிகர் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி சேதப்படுத்தப்பட்டதாக இன்று தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா ஊரடங்கில் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் தற்போது வெறுப்புணர்வு அரசியலில் சிலர் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதற்கிடையில் கமல்ஹாசன் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில், பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்த சாயமும் பூச முடியாது எனத் தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் மெசேஜில் கூறியிருப்பதாவது:தன் நம்பிக்கைகளைப் பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இணைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

You'r reading பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது. கமல்ஹாசன் எச்சரிக்கை... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகரின் பிரார்த்தனை கூட்டத்தில் மகிழ்ச்சியை படரவிட்ட குடும்பம்.. சிரித்தபடி உருக்கம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்