இரண்டு பிரபல நடிகைகள் மோதல்... குடுமி பிடி சண்டையாகுமோ எனப் பரபரப்பு..

Kangana, Tapsee Two famous actresses clash ...

இரண்டு நடிகைகள் ஒரே படத்தில் நடித்தால் மோதல் உருவாவது அவ்வப்போது நடக்கிறது. இதனால் படத்திலிருந்து நடிகை வெளியேறிய சம்பவமும் நடந்திருக்கிறது. ஆனால் அதிகம் பார்த்துக்கொள்ளாமலே மோதிக்கொள்ளும் இரண்டு ஹூரோயின்கள் என்றால் அது டாப்ஸி, கங்கனா ரனாவத். ஒருவரையொருவர் மறைமுகமாக அவ்வப்போது பேட்டிகளின் போது தாக்கி வந்தனர். டாப்ஸி கடந்த ஆண்டு சென்னை வந்தபோது பேட்டி அளித்தார். அப்போது கங்கனா தலைவி படத்துக்கு 25 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறதே என்ற போது, அப்படியா, நானென்லாம் சில லட்சங்களைத் தாண்டவில்லை என்றார்.

சமீபத்தில் கங்கனா ரனாவத் சுஷாந்த் தற்கொலை பற்றி பேட்டி அளித்தபோது, வாரிசு நடிகர்கள் தான் சுஷாந்த் தற்கொலைக்குக் காரணம் எனக் கூறியிருந்தார். அதுபற்றி போலீஸ் விசாரணைக்கு அழைத்த போது வர மறுத்த கங்கனா, எனக்கு தந்த பத்மஸ்ரீ விருதையும் திருப்பி அளிக்கத் தயார் என்றார். மேலும் அவர் கூறும்போது. சுஷாந்த் வழக்கு தொடர்பாகக் கரண் ஜோஹரை அழைத்து விசாரிக்க வேண்டும். டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் இருவரும் நாளையே கரண் ஜோஹரை பிடிக்கும் என்று சொல்லலாம். அவரை பிடிக்கும் என்றால் அலியாபட், அனன்யா பாண்டேவைவிட அழகாக இருந்தும் பி கிரேடு நடிகைகளாக ஏன் நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள் என்றார்.

கங்கனா தன்னை தாக்கியதையறிந்து டாப்ஸி கோபம் அடைந்து அவர் மீது மறைமுக தாக்குதல் நடத்தினர். எங்களுக்கு பத்தாவது, 12வது கிரேட் ரிசல்ட் வந்துவிட்டது. அதிகாரப்பூர்வமாக இந்த தரவரிசையைப் பின்பற்றுகிறோமா, இதற்கு முன் எங்களது தரவரிசை என்னாவாக இருந்தது. நம்பர் ஒண்ணா, நம்பர் டூவா?. அடுத்த முறை மற்றொரு திறமையான நடிகர் தனது பங்களிப்பை இந்தியா சினிமாவுக்கு தந்து விடாதபடி அவர்கள் மனதில் ஒரு பயம் வாரிசுகள் பெயரால் பரப்பப்படுகிறது என்று எண்ணுகிறேன். ஏனென்றால் எதிர்மறை கருத்துக்கள் அதிகம் பரப்பப் படுகிறது. இது போன்ற நிலைக்கு இப்படிப்பட்டவர்களும் காரணம் என்பதி மறந்துவிடக் கூடாது. எங்களை பி கிரேட் நடிகை என்று கூறும் அந்த நடிகை வாரிசு அழுத்தத்திலும் தான் இருப்பதை உணர்த்துகிறார் என்று எண்ணுகிறேன் என டாப்ஸி கூறி உள்ளார். ஒருவரையொருவர் நேரில் பார்க்காமல் மோதிக்கொள்ளும் கங்கனாவும் டாப்ஸியும் நேரில் பார்க்க நேர்ந்தால் குடுமிப் பிடி சண்டை போடுவார்களோ என்று நெட்டிஸன்கள் தங்களது கமெண்டை பகிர்ந்து வருகின்றனர்.

You'r reading இரண்டு பிரபல நடிகைகள் மோதல்... குடுமி பிடி சண்டையாகுமோ எனப் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்