அனுஷ்கா திருமணம் காதலனுக்காக காத்திருக்கிறதா? திரையுலகில் 15 ஆண்டுகள் ஏற்ற, இறக்கம்..

Anushka thanks fans for celebrating her 15 years in films

நடிகை அனுஷ்கா திரையுலகுக்கு வந்து 15 ஆண்டுகளாகிறது. தமிழில் ரஜினியுடன் லிங்கா, சூர்யாவுடன் சிங்கம், விக்ரமுடன் தெய்வத்திருமகள், சிம்புவுடன் வானம், மாதவனுடன் இரண்டு என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்.திரையுலகில் அனுஷ்காவின் வளர்ச்சி எளிதாக அமையவில்லை. பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துத் தான் அவர் நிலையான ஒரு இடத்தை பிடித்தார்.

பல்வேறு ஹீரோக்களுடன் அனுஷ்கா நடித்தபோதும் அவருக்குப் பொருத்தமான ஜோடியாக பிரபாஸ் அமைந்தார். அவருடன் இணைந்து நடித்த பாகுபலி படம் இந்திய அளவில் பெரிய வசூலைப் பெற்று சாதனை படைத்தது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக கிசுகிசு இருந்து வந்தாலும் அதை அவர்கள் இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை. இருவரும் நண்பர்களாக பழகுவதாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றனர். குடும்பத்தினர் இருவருக்கும் வரன் பார்த்து திருமணத்துக்கு வற்புறுத்தினர். 30 வயதைக் கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கின்றனர்.

குடும்பத்தினர் பார்க்கும் வரன்களை அவர்கள் தவிர்ப்பதால் பிரபாஸ், அனுஷ்காவின் காதல் சர்ச்சை தொடர்ந்த வண்ணமிருக்கிறது. அனுஷ்காவும் தனது காதலனுக்காக தன்னுடைய திருமணத்தைத் தள்ளிப் போட்டு வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திரையுலகுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதற்கு அனுஷ்காவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் குவித்து வருகின்றனர். அவர்களுக்குத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி சொல்லியிருக்கும் அனுஷ்கா,உங்களின் எல்லையற்ற ஆதரவுக்கு நன்றி சொல்ல வார்த்தை கிடைக்கவில்லை. என் இதயத்திலிருந்து உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.அனுஷ்கா இரண்டு வருடத்துக்கு பிறகு நடித்திருக்கும் நிசப்தம் படம் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு திரைக்கு வரவுள்ளது.

You'r reading அனுஷ்கா திருமணம் காதலனுக்காக காத்திருக்கிறதா? திரையுலகில் 15 ஆண்டுகள் ஏற்ற, இறக்கம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வனிதாவை துரத்தும் சர்ச்சை விஷயங்கள்.. வேகமெடுக்கும் 3வது திருமண விவகாரம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்