வங்கியில் ரூ.36 லட்சம் மோசடி செய்த தமிழ் நடிகை

வங்கியில் போலி ஆவணங்களை கொண்டு ரூ.36 லட்சம் கடன் வாங்கி அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாடுக்கு தமிழ் நடிகை ஒருவர் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரளாவை சேர்ந்த நடிகை சிந்துமேனன். ஈரம், சமூத்திரம், கடல்பூக்கள் உள்ளிட்ட படங்களில் இவர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில், சிந்து மேனன் அவரது சொத்து ஆவணங்களை கொண்டு தனியார் வங்கி ஒன்றில் ரூ.36 லட்சம் கடன் வாங்கி உள்ளார். இந்த கடன் தொகை அவரது சகோதரருக்கு வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிந்துமேனன் ரூ.36 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்தவில்லை என்றும் அவர் வங்கியில் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் போலி எனவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சிந்துமேனனின் சகோதரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிந்து மேனன் லண்டனுக்கு தப்பிச் சென்று அங்கேயே செட்டிலாகவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

You'r reading வங்கியில் ரூ.36 லட்சம் மோசடி செய்த தமிழ் நடிகை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவனால் பரபரப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்