எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது..

SPB Health Condition Very Serious: Hospital Repor Today

பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணம் அடைய வேண்டித் திரையுலகினர் நாளை 20ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி 5 நிமிடம் அவரது பாடலை போட்டு எஸ்பிபிக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எஸ்.பி.பி. உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுவாசத்தைச் சீராக வைத்துக் கொள்ளத் தொடரும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நேற்றும் கவலைக்கிடமான நிலையில் தான் எஸ்பிபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

You'r reading எஸ்பிபி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகை குஷ்பூவுக்கு திடீர் ஆப்ரேஷன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்