பிரேத பரிசோதனைக்கு 12 மணி நேரத்துக்கு முன்பு இறந்த சுஷாந்த்.. ரிப்போர்ட்டில் நேரம் குறிப்பிடாதது ஏன்?

Sushanth Death Case Sudden Turning: CBI Enquiry

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாகக் கூறப்பட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மும்பை போலீசார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த சுஷாந்த் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு பின்னர் உடலை குடும்பத்தினர் பெற்று தகனம் செய்தனர். ஆனால் பிரேத பரிசோதனைக்கு நடப்பதற்கு 10 -12 மணி நேரத்திற்கு முன்பே சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து விட்டார் என்று மருத்துவமனை மருத்துவர்கள் மும்பை போலீசாரிடம் ஆகஸ்ட் 5 ம் தேதி தெரிவித்தனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு சிபிஐ விசாரித்து வருகிறது, மேலும் அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் நடிகர் இறந்த நேரம் பற்றி குறிப்பிடப்படவில்லை என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து தங்கள் கருத்தைத் தெரிவிக்க எய்ம்ஸைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் சுதிர் குப்தா தலைமையிலான குழு, அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர் மும்பைக்குச் செல்லும். இது வழக்கின் ஒரு பகுதியாக சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு பிறகு அதனை கோர்ட் சிபிஐயிடம் அளித்தது.

சுஷாந்த் இறப்பு நேரம் பிரேத பரிசோதனைக்கு 10 முதல் 12 மணி நேரம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனை ஜூன் 14 இரவு 11:30 மணிக்கு நடந்தது. ஜூலை 27 ம் தேதி, மும்பை போலீசாருக்கு அவர் இறந்த நேரத்தில் நடிகரின் இல்லத்தில் காணப்பட்ட குர்தாவின் இழுவிசை வலிமை குறித்த தடயவியல் அறிக்கை கிடைத்தது. 200 கிலோ வரை எடையைத் தாங்கக்கூடியதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. அதே துணியின் இழை நடிகரின் கழுத்தில் காணப்படும் இழைகளுடன் பொருந்துகிறது.

You'r reading பிரேத பரிசோதனைக்கு 12 மணி நேரத்துக்கு முன்பு இறந்த சுஷாந்த்.. ரிப்போர்ட்டில் நேரம் குறிப்பிடாதது ஏன்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பேரனின் திருமணத்திற்காக பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பறந்த தாத்தாவும் பாட்டியும்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்