எஸ்பிபி முழுமையாக கண்விழித்தார், பிசியோதெரப்பியில் சுறுசுறுப்பு..

SPB Awake Today Actively Paticipates in Physiotherapy

மருத்துவமனை அறிக்கை விவரம்..

பாடகர் எஸ்பி,பாலசுப்ர மணியம் கொரோனா பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரது உடல்நிலை ஓரிரு தினங்களில் கவலைக்கிடமானது.

எஸ்பிபி குணம் அடைய வேண்டி திரையுலகினர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். அத்துடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். வென்டிலேட்டர், எக்மோ சிகிச்சைகள் அவருக்கு டாக்டர்கள் அளித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் மிக ஆபத்தான கட்டத்துக்கு சென்றவர் மெல்ல மீண்டு வருகிறார். அவரது மகன் சரண் தினமும் தந்தையின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பற்றி கூரிய அவர், சைகை மொழியில் என்னிடம் பேசினார். தம்ஸ் அப் விரல் உயர்த்தி காட்டினார், பாட்டு கேட்டு தாளம்போடுகிறார் என பல்வேறு விவரங்களை அவர் தெரிவித்தார்.

எஸ்பிபி உடல்நிலை பற்றி மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எஸ்பி.பாலசுப்ரமணியத்துக்கு வென்ட்டிலேட்டர், எக்மோசிகிச்சை தொடர்ந்து தரப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்று முழுமையாக கண்விழித்தார். கேட்கும் கேள்விகளுக்கு நன்கு பதில் அளித்து ரெஸ்பான்ஸ் செய்தார். பிசியோதெரபி சிகிச்சையில் சுறுசுறுப்பாக பங்கெடுத்துக் கொண்டார். மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading எஸ்பிபி முழுமையாக கண்விழித்தார், பிசியோதெரப்பியில் சுறுசுறுப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முகம் பொலிவு அடைய அரிசி நீர் உதவுமா??வாங்க பாக்கலாம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்