ஆத்மிகாவுடன் விஜய் ஆண்டனி இணைந்தார்..லாக்டவுனுக்கு பிறகு ஜோடி சேர்ந்தனர்..

Actor Vijay Antony, Aathmika begin shooting for Ananda Krishnans political thriller


டைட்டிலை பார்த்ததும் கற்பனை குதிரையை தட்டிவிடாதீர்கள். இது ஷூட்டிங் பற்றிய தகவல்தான். கொரோனா லாக்டவுனால் கடந்த 5 மாதமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தது. அப்படி நின்ற ஹூட்டிங்குகளில் விஜய் ஆண்டனி படமும் ஒன்று.
விதார்த் நடித்த ஆள் படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் தற்போது விஜய் ஆண்டனி நடிக்கிறார். அரசியல் த்ரில்லராக உருவாகிறது. இப்படத்தில் ஆத்மிகா விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேர்ந்து நடிகிறார். ஆத்மிகா ஏற்கனவே ஹிப்ஹாப் ஆதி நடித்த 'மீசைய முருக்கு' படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.
5 மாதத்துக்கு பிறகு செப்டம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்தது. அதன்படி விஜய் ஆண்டனி படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தால் இன்னும் பெயரிடப்படாத இப்பபடத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்கிறார்.


அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கபட்டு அதிகபட்சம் 75 பேருடன் திரைப்படபடப்பிடிப்பு தொடங்கியது. மற்றபடி முககவசம். சேனிடைசர் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளும் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டது.

You'r reading ஆத்மிகாவுடன் விஜய் ஆண்டனி இணைந்தார்..லாக்டவுனுக்கு பிறகு ஜோடி சேர்ந்தனர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - குட்டி லவ் ஸ்டோரி ஆந்தாலஜி படத்தை இயக்கும் 4 பிரபல இயக்குனர்கள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்