தீபாவளிக்கு முன்னதாக கோப்ராவை முடிக்கப்போகிறார் சியான்.. அடுத்த ஷூட்டிங்கிற்கு அவசர அழைப்பு..

Vikrams Cobra team to wrap up shooting before Deepavali?

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்துவின் கோப்ரா என இரண்டு படங்களில் மும்முரமாக இருக்கிறார் சியான் விக்ரம். இதில் கோப்ரா படக் குழு படுவேகத்தில் இருக்கிறது. ஏற்கனவே பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பைத் தீபாவளிக்கு முன்பாக முடிக்கத் தயாராக உள்ளது.கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவியதால் ரஷ்யாவிலிருந்து கோப்ரா படக் குழு ஷூட்டிங்கை வேகமாக முடித்துக்கொண்டு திருப்பி வந்தது. வரும் அக்டோபரில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். கோப்ரா ஒரு சூப்பர் நேச்சுரல் த்ரில்லர். இதில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விக்ரம் ஏழு வித்தியாசமான தோற்றங்களில் காணப்பட்டார், அது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அநேகமாக பொங்களுக்கும் படத்தை வெளியிட எண்ணி உள்ளது படக் குழு. கோப்ரா படத்தை முடித்த கையோடு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார் விக்ரம். அதற்கான அழைப்பு மணிரத்னம் தரப்பிலிருந்து வந்திருக்கிறதாம்.

You'r reading தீபாவளிக்கு முன்னதாக கோப்ராவை முடிக்கப்போகிறார் சியான்.. அடுத்த ஷூட்டிங்கிற்கு அவசர அழைப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நிரந்தர முதல்வர்!.. சர்ச்சையை தோலுரித்து காட்டிய அதிமுக கூட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்