ஏழேழு ஜென்மம் வாழ்வேன் என்ற கைப்பிடித்த கணவர் மீது 10 நாளில் கவர்ச்சி நடிகை பாலியல் புகார்..

Poonam Pandeys husband arrested for allegedly assaulting

2011வரை யாரென்று வெளியுலகுக்கு அதிகம் தெரியாதவர் பூனம் பாண்டே. அந்த ஆண்டில் நடந்த உலக கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பிறகு 2013 ம் ஆண்டு நஷா என்ற இந்தி படத்தில் நடித்தார். கவர்ச்சி நடிகையாக மேலும் சில படங்களில் நடித்தார். அதன்பிறகு பெரிதாகப் பட வாய்ப்பு இல்லாததால் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் தனது கவர்ச்சி காட்சிகளை வெளியிட்டு சம்பாதித்து வருகிறார்.

பாலிவுட்டில் 100க்கு 90 சதவீதம் ஹீரோயின்கள் யாராவது ஒரு பாய்ஃப்ரண்டை வைத்திருக்கிறார்கள். அதுபோல் பூனம் பாண்டேவுக்கும் சாம் பாம்வே என்ற பாய் ஃபிரண்ட் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். அவருடன் நடனம் ஆடியும் வீடியோக்கள் பகிர்வார் பூனம். இருவரும் லி விங் டு கெதர் பாணியில் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.கொரோனா லாக்டவுனில் கடந்த ஜூலை மீதும் இருவரும் நிச்சயாதார்த்தம் செய்துகொண்டனர். செப்டம்பர் மாதம் 10ம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. அந்த புகைப்படங்களை பூனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் அப்போது சினிமா டயலாக் பாணியில், ஏழேழு ஜென்மமும் உன்னோடு வாழ்வேன் என மெசேஜ் வெளியிட்டார்.

அதைக்கண்டு ரசிகர்கள் கணவர் மீது இவ்வளவு அன்பா என்று வியந்து பூனமை பாராட்டியதுடன், உங்கள் விருப்பப்படியே வாழ்க்கை அமையட் டும் என்று வாழ்த்தினார்கள். அடுத்த ஒரு வாரத்தில் இருவரும் தேனிலவுக்குப் புறப்பட்டனர். அதையும் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டவர் விமான நிலையத்தில் கணவருக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்தார்.கோவாவிற்குப் பயணம் சென்றது பூனம் -சாம் ஜோடி. தேனிலவுக்குச் சென்ற அடுத்தநாள் பூனம் பாண்டே கோவா கனகோனா பகுதி போலீஸ் நிலையத்துக்கு சென்று என் கணவர் என்னை பாலத்காரம் செய்து அடித்துத் துன்புறுத்தினார் என புகார் கொடுத்தார்.

பலாத்கார புகார் என்றதும் போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுத்து சாம் பாம்வேவை கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். பூனம் பாண்டேவிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.இது குறித்து போலீஸர் கூறும்போது, பூனம் பாண்டேவை அடித்து பலவந்தப்படுத்தி துன்புறுத்தி அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

You'r reading ஏழேழு ஜென்மம் வாழ்வேன் என்ற கைப்பிடித்த கணவர் மீது 10 நாளில் கவர்ச்சி நடிகை பாலியல் புகார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராஜ்யசபா துணை தலைவர் ஒரு நாள் உண்ணாவிரதம்.. இன்று காலை முடிந்தது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்