நாங்களும் தான் வயகாட்டு வேல பாப்போம்.. களத்தில் குதித்த தந்தை மகன்..

நடிகர்கள் பார்த்திபன், கார்த்தி, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி போன்றவர்கள் வயகட்டில் டிரக்டரில் ஏர் உழுவது முதல் களை எடுப்பதுவரை எல்லா வேலைகளும் செய்வார்கள். சமீபத்தில் ஷமீரா ரெட்டிக்கும் இந்த ஆசை வர அவர் தனது தோட்டத்தில் தோட்ட வேலை பார்த்து காய்கறி பயிரிடத் தொடங்கிவிட்டார். பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் இப்போது தனது வேர்களைத் திரும்பப் பெறுவதாகத் தெரிகிறது. சொகுசான பங்களா, பளிங்கு கல் பதித்த அறைகளில் சுற்றிச்சுற்றி போர் அடித்துவிட்டது போல் தெரிகிறது. மகன் தைமூருடன் புறப்பட்டு வயல் காட்டுபக்கம் வந்துவிட்டார் சைஃப் அலி. வாய்கால் வெட்டி வயலுக்கு திருப்பி விட்டவருக்கு உடனிருந்து தமீர் உதவி செய்தான்.

சைஃப் மற்றும் தைமூர் ஆகியோர் தங்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்தனர். தைமூர் ஆழமான நீரில் இறங்கி நிற்க வாய்க்கால் அடைப்பை நீக்கினான். எல்லாவற்றையும் சைஃப் அருகிருந்து மேற்பார்வையிட்டார். சைஃயிப் மனைவி கரீனா கபூர் தற்போது கர்ப்பாக இருக்கிறார். அவர்கள் குடும்பத்துடன் விடுமுறை பயணமாக சொந்த ஊர் பட்டோடிக்கு சென்றிருந்த போது வயலில் இறங்கி வேலை பார்த்தனர் தந்தையும் மகனும். விவசாய சட்டம் நிறைவேறியதிலிருந்து ஸ்டார் நடிகர், நடிகைகள் அதிகமாக விவசாய நிலங்கள் வாங்க தொடங்கி உள்ளனர்.

You'r reading நாங்களும் தான் வயகாட்டு வேல பாப்போம்.. களத்தில் குதித்த தந்தை மகன்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சீனாவுக்கு டாட்டா காட்டி இந்தியா வந்த ஜெர்மன் ஷூ நிறுவனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்