பார்வதி-ரித்விகாவை பழைய நினைவுக்கு இழுத்து சென்றவர்கள்..

நடிகை பார்வதி 2008 ஆம் ஆண்டில் இயக்குனர் சசியின் (பிச்சைக்காரன் புகழ்) பூ மூலம் தமிழில் அறிமுகமானார். எழுத்தாளர் தமிழ் செல்வனின் சிறுகதையான வெயிலோடு போய் தழுவலாக உருவானது. இப்படத்தில் ஸ்ரீ காந்த் கதாநாயகனாக நடித்தார்.சமீபத்தில், பார்வதி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பழைய நினைவை பகிர்ந்திருக்கிறார். அதில் பூ படத்தில் மாரி கதாபாத்திரத்தில் எவ்வாறு நடித்தார் என்ற சுவாரஸ்யமான தகவல் பகிர்ந்துள்ளார்.

“2008 ஆம் ஆண்டில், டைரக்டர் சசி“ வெயிலோடு போய் ”என்ற சிறுகதையை விவரித்த அந்த நாட்களை நான் நினைவில் வைத்திருக்கிறேன். தமிழ்செல்வனின் இந்த சிறுகதையை அடிப் படையாகக் கொண்டது “பூ”. நான் தமிழின் அடிப்படைகளை மட்டுமே கற்றுக் கொண்டிருந்தாலும், இந்த நாவல் எனக்கு உதவத் தவறவில்லை. அது எனக்கு வழிகாட்டியது மற்றும் அந்த கதாபாத்திரமாக நான் உணர என் திறனை வளர்த்தது. மாரி என் கற்பனையின் கதாபாத்திரமாக என் மனதில் பதிந்தாள்.

அப்படத்தில் எனது தோற்றம் பற்றிய புகைப்படத்தை பார்க்கும்போது எனக்கு இப்போது பிரமிப்பு மற்றும் அன்பு வெளிப்படுகிறது என்றார். முதல் படத்திலேயே பார்வதி இந்த கதாபாத்திரத்துக்காக ஃபிலிம்பேர் விருது பெற்றார். அவரை பூ பார்வதி என்றே இப்போதும் குறிப்பிடுகிறார்கள்.பார்வதி பாணியில் தந்து இதயம் கவர்ந்த படம் பற்றி ரித்விகா தெரிவித்துள்ளார். விடுதலையாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு அணிக்கு நடிகை ரித்விகா நன்றி தெரிவித்தார். அதியன் அதிராய் இயக்கிய இப்படத்தில், தினேஷ், ஆனந்தி, ரித்விகா, முனிஷ்காந்த், ஜான் விஜய், ஜி மரிமுத்து, ரமேஷ் திலக், சார்லஸ் வினோத், ராமா மற்றும் மூணார் ரமேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதுகுறித்து ரித்விகா தனது இணைய தள பக்கத்தில் கூறியதாவது: குண்டு வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. இதுபோன்ற ஒரு ஆத்மார்த்தமான படத்தில் பணிபுரிய எனக்கு வாய்ப்பளித்த எனது இயக்குனர் அதியன் ஆதிராய் மற்றும் தயாரிப்பாளர் பீம்ஜிக்கு மற்றும் குழுவினருக்கு நன்றிகள் என்றார்.இரண்டாம் உலகப் போரின் உண்மையான நிகழ்வுகளிலிருந்து ஈர்க்கப்பட்ட கற்பனைக் கதையை படம் மையமாகக் கொண்டுள்ளது. ஒளிப்பதிவு கிஷோர்குமாரும், தி காஸ்ட் லெஸ் கலெக்டிவ்வின் டென்மா இசை அமைத்தனர். பா ரஞ்சித் இப்படத்தை தயாரித்தார்.

You'r reading பார்வதி-ரித்விகாவை பழைய நினைவுக்கு இழுத்து சென்றவர்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ராஷிகன்னாவுக்காக பெற்றோர் செய்த ஸ்பெஷல் நிகழ்ச்சி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்