கணவருடன் ஷூட்டிங்கிற்கு வரும் பிரபல நடிகை..

ஹீரோயின்கள் பொதுவாக தனது தாயை துணைக்கு அழைத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வருவார்கள் பிரபல நடிகை ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது கணவரை அழைத்துக் கொண்டு வருகிறார். கொரோனா ஊரடங்கில் நடிகை காஜல் அகர்வால் மும்பை வீட்டில் முடங்கி இருந்தார். 5 மாதம் வீட்டிலேயே இருந்தவரை குடும்பத்தினர் பேசி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர். அப்போது தனது தொழில் அதிபர் பாய்ஃபிரண்டு கவுதம் கிட்ச்லு பற்றி அவர்களிடம் தெரிவித்தார். அவரை மணக்க குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் மாதம் இவர்கள் திருமணம் மும்பையில் நடந்தது. கொரோனா கால கட்டுப்பாடு இருந்தாதால் குடும்பத்தினர் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். திருமணம் முடிந்தவுடன் படப்பிடிப்புக்கு செல்ல தயாராக இருந்தார் காஜல் அகர்வால். ஆனால் அவர் நடிக்கும் இந்தியன் 2, ஆச்சார்யா ஆகிய படப்பிடிப்புகள் தொடங்காமல் இருந்தது. இதையடுத்து கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு கிளம்பினார்.

ஒரு மாத காலம் அவர் அங்கு தேனிலவு கொண்டாடினார். கணவரும் அவரும் சேர்ந்து சினிமா ஹீரோ, ஹீரோயின் பாணியில் ரொமான்ஸுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதுடன் கடலுக்கு அடியில் நீந்தும் ஸ்கூபா டைவிங், கடலுக்கு அடியில் உள்ள ரெஸ்டாராண்ட்டில் உணவு என ஜமாய்த்தனர். இந்நிலையில் சிரஞ்சீவியுடன் காஜல் நடிக்கும் ஆச்சார்யா படப்பிடிப்பிலிருந்து காஜலுக்கு அழைப்பு வந்தது. தேனிலவு பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இந்தியா திரும்பினார். ஆச்சார்யா படப்பிடிப்பு நேற்று ஐதாராபாத்தில் தொடங்கியது. அதில் பங்கேற்க காஜல் அகர்வால் வந்தார். உடன் கணவர் கவுதம் கிட்ச்லுவையும் அழைத்து வந்தார். அவர்களை படக்குழு வரவேற்றது. பின்னர் ஹீரோ சிரஞ்சீவியுடன் இருவரும் ஆசி பெற்றனர். அவர்களுக்கு சிரஞ்சீவி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். படக்குழுவினர் அவர்களது திருமணத்தை கொண்டாடும் வகையில் கேக் வரவழைத்திருந்தனர்.

அதை காஜல்-கவுதம் இணைந்து கட் செய்தனர். பின்னர் படப்பிடிப்பு தொடங்கியது. காஜல் ஏற்கனவே ஹாரர் படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார், அந்த படப்பிடிப்புக்கும் கவுதம் கிட்ச்லுவை அழைத்து வந்தார். அங்கு நடந்த டெஸ்ட் ஷூட்டில் காஜல் கலந்துகொண்டார். ஒரு சில போட்டோக்களுக்கு காஜலுடன் இணைந்து கவுதம் போஸ் தந்தார். அந்த படங்கள் வெளியாகி வைரலானது. திருமணத்துக்கு பிறகும் காஜல் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார். இதனால் புதுபட வாய்ப்புகளை ஏற்க தயாராக உள்ளார். மேலும் காதல், ரொமான்ஸ் காட்சிகளில் திருமணத்துக்கு முன்பு நடித்ததுபோலவே காட்சிக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஷூட்டிங் காலகட்டத்தில் கணவருடன் காஜல் வருவதை சில இயக்குனர்கள் தர்மசங்கடமாக உணர்வார்கள், இது காஜலுக்கு பட வாய்ப்புகளை பெறுவதற்கு இடையூறாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

You'r reading கணவருடன் ஷூட்டிங்கிற்கு வரும் பிரபல நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சவரனுக்கு ரூ. 472 உயர்ந்தது! ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை! 16-12-2020

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்