விஜய்யின் மாஸ்டர் 4 நாளில் 100 கோடி வசூல் சாதனை.. கொரோனா காலகட்டத்தில் அள்ளும் கலெக்‌ஷன்..

விஜயின் மாஸ்டர் 4 நாட்களில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ .100 கோடியைத் தாண்டியுள்ளது. நாடு முழுவதும் திரையரங்குகளில் வெறும் 50 சதவீத ஆக்கிரமிப்பு சதவீதத்துடன் வெளியிடப்பட்ட படம் உண்மையில் ஒரு பெரிய சாதனை புரிந்திருக்கிறது. மேலும், வெளிநாடுகளில் உள்ள முக்கிய பகுதிகள் லாக்டவுன் நிலை நீடிக்கிறது. எனவே மாஸ்டர் படங்களை அங்கு வெளியிட முடியவில்லை. படம் வெளியாகி 4 நாட்களுக்குப் பிறகு மொத்தமாக 100 கோடி வசூலித்திருப்பதாக திரையுலக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக ரூ .1 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ்டர் சென்னையில் தனது வலுவான காலடி பதித்துள்ளது. நான்கு நாட்கள் முடிவில், இந்த படம் நகரில் ரூ 4.39 கோடியை வசூலித்துள்ளது. இன்னும் நிறைந்த அரங்குடன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் திரையரங்குகளில் மாஸ்டர் சிறப்பாக செயல்படுகிறது என திரையுலக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ட்டின் லூதர்கிங் தின கொண்டாட்டங்கள் காரணமாக நீண்ட வார இறுதி விடுமுறை இருப்பதால பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு அதிகம் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக மாஸ்டர் வெளியாவதில் ஊசலாட்டம் நிலவி வந்தது. 50 சதவீத டிக்கெட் அனுமதி என்றதால் பட ரிலீஸை படக்குழு தள்ளிவைத்தது. ஆனாலும் தியேட்டர் அதிபர்கள், மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் தமிழக முதல்வருக்கு 100 சதவீத டிக்கெட் அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். அதை பரிசீலித்து 100 சதவீத டிக்கெட் அனுமதி வழங்கியது அரசு. ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். டாக்டர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது. 100 சதவீத டிக்கெட் அனுமதித்தால் கொரோனா வேகமாக பரவும் என்று அறிவுறுத்தியதுடன் அரசு 100 சதவீத முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றனர். மத்திய அரசும் 100 சதவீத டிக்கெட் கூடாது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் 100 சதவீத டிக்கெட் அனுமதியை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் இதுகுறித்து அரசிடம் கருத்து கேட்டது. பலமுனைகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் 100 சதவீத அனுமதி உத்தரவை ரத்து செய்த தமிழக அரசு 50 சதவீத டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கியது. மாஸ்டர் படம் அறிவித்தபடி 13ம் தேதி அதிக தியேட்டர்களில் வெளியாகி வசூலை ஈட்டி வருவதுடன், ஹிட் படமாகவும் அமைந்துள்ளது. தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்த்தபடி மாஸ்டர் படம் ரசிகர்களை தியேட்டருக்கு திரள வைத்திருக்கிறது. இந்நிலையில் விஜய் மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி எண்டெமால் ஷைன் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் ரீஜ் கூறுகையில், "மாஸ்டர் முழு செயல்திறன் மற்றும் சக்தி வாய்ந்த கதை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை எதிரொலிக்கிறது. கொரோனா கால ஊரடங்கு தளர்வில் தமிழில் வெளியான முதல் பெரிய படம் “மாஸ்டர்” ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அத்தகைய சூடான படத்துக்கான உரிமைகளைப் பெற்றதில் நாங்கள் நம்ப முடியாத பெருமை அடைகிறோம்; இந்தி பார்வையாளர்களை ஈர்க்க இந்த படத்தின் ஈர்ப்பு மந்திரத்தை மீண்டும் உருவாக்க நாங்கள் எதிர் நோக்கி இருக்கிறோம், ”என்று ரீஜ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மாஸ்டர் படம் ஏற்கனவே தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனாலுல் மீண்டும் இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தி முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர். தமிழில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் 4 நாட்களில் 100 கோடி வசூலை கடந்து கொரோனா காலகட்ட ஊரடங்கு தளர்வில் சாதனை படைத்திருக்கிறது.

You'r reading விஜய்யின் மாஸ்டர் 4 நாளில் 100 கோடி வசூல் சாதனை.. கொரோனா காலகட்டத்தில் அள்ளும் கலெக்‌ஷன்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்