ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடிய காமெடி நடிகர்..

நகைசுவை நடிகர்களான வடிவேலு, செந்தில், கவுண்டமணி போன்றவர்களின் அடுத்த வரிசையில் இடம் பிடித்திருப்பவர் தான் சூரி. இவரின் எதார்த்த நகைச்சுவை அனைவரையும் கவர்ந்து விட்டது. இவர் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறுவது இன்றைய காலத்தின் புதிய ட்ரெண்டிங். சந்தானம், விவேக் போன்ற நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் நகைச்சுவைக்கு பெயர் போன செந்தில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் நமது பரோட்டா சூரி அண்ணனும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகயுள்ளார். மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் மிக சிறப்பாக பொங்கலை கொண்டாடினார். அங்கு குழந்தைகளுக்கு தேவைப்படும் புத்தகம், ஸ்கூல் பேக், உண்டியல் போன்றவற்றை பரிசாக வழங்கியுள்ளார். இவர் குழந்தைகளோடு எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் ஊடகம் முழுவதும் பரவி வருகிறது.

You'r reading ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடிய காமெடி நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத நம்பிக்கைகளை காயப்படுத்துகிறது சைப் அலி கானின் தாண்டவ் வெப் தொடருக்கு எதிர்ப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்