தயாரிப்பாளர் சங்கத்துக்காக புதுபடத்தில் நடிக்கிறார் சிம்பு..

நடிகர் சிம்புவுக்கு இன்று பிப்ரவரி 3ம் தேதி பிறந்த நாள். அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பிறந்த வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பிறந்த நாளன்று நான் வெளியூரில் இருப்பதால் ரசிகர்கள் யாரும் வந்து காத்திருந்து ஏமாற வேண்டாம் என்று சிம்பு தெரிவித்திருந்தார். இதையடுத்து ரசிகர்கள் ஆங்காங்கே தாங்கள் இருக்கும் இடத்திலேயே நற்பணிகள் செய்து சிம்பு பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அச்சங்கம் மற்றும் உறுப்பினர் நலனுக்காக சிம்பு புதிய படம் இன்றை நடித்து தர சம்மதித்திருக்கிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பவது: தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள்‌ சங்கத்திற்கு நிதி திரட்டும்‌ பொருட்டு கலை நிகழ்ச்சிகள்‌ நடத்தலாமா என நிர்வாகிகள்‌ ஆலோசனை நடத்திய நேரத்தில்‌, தாமாக முன்வந்து ஒரு படத்தில்‌ நடித்து கொடுப்பதாக அறிவித்தார் நமது சங்க உறுப்பினர்‌ சிலம்பரசன்‌ டி.ஆர். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்‌. இந்த படத்தின்‌ மூலம்‌ கிடைக்கும்‌ நிதியை கொண்டு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ உதவி, வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஆயுள்‌ காப்பீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள்‌ செயல்படுத்தப்படும்‌ என்பதை தெரிவித்து கொள்கிறோம்‌.

சங்க வளர்ச்சிக்காகவும்‌, தயாரிப்பாளர்களின்‌ நலனுக்காகவும்‌ உருவாக்கப்படும்‌ இந்த படத்தை சங்கத்தின்‌ துணைத்தலைவர்‌ சிங்கார வேலன்‌ மிகுந்த பொருட் செலவில்‌ தயாரிப்பார்‌ என்பதையும்‌, "வானம்‌” படத்தின்‌ மூலம்‌ வசனகர்த்தாவாக அறிமுகமாகி புகழ் பெற்ற ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம்‌ எழுதி இயக்குவார்‌ என்பதையும்‌ தெரிவித்து கொள்கிறோம்‌. இதற்கான படப்பிடிப்பு விரைவில்‌ துவக்கப்பட்டு இந்த ஆண்டே படம்‌ 'திரைக்கு வரும்‌ என்பதையும்‌ பகிர்ந்து கொள்ள கடமைப் பட்டுள்ளோம்‌. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொங்கல் தினத்தில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. தற்போது மாநாடு படத்தில் நடிக்கிறார். இதை தொடர்ந்து பத்து தல என்ற படத்தில் நடிக்கிறார்.

You'r reading தயாரிப்பாளர் சங்கத்துக்காக புதுபடத்தில் நடிக்கிறார் சிம்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 24 மாவட்டங்களில் கட்டுப்பட்டது கொரோனா பரவல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்