கோவிட் 19 நெகடிவ்: சூர்யா படப்பிடிப்பில் பங்கேற்பது எப்போது? தொற்றிலிருந்து முற்றிலுமாக குணம்..

கொரோனா காலகட்டத்தில் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் தொடங்கி கோலிட்டில் விஷால் வரை பல நடிகர் நடிகைகள் கொரோனா தொற்றுக்குள்ளாயினர். சிகிச்சை தனிமைப்படுத்தலுக்கு பிறகு அவர்கள் குணம் அடைந்தனர். அவர்கள் எல்லோருமே மீண்டும் படப் பிடிப்பில் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று குறைந்த நிலையில் திரையுலகில் படப்பிடிப்பு பணிகள் மற்றும் பட வெளியீட்டுப் பணிகள் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளது.இந்நிலையில் பாண்டி ராஜ் இயக்கத்தில் சூர்யா 40 புதிய படம் தொடங்குவது பற்றி அறிவிக்கப்பட்டது. அதற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து சிகிச்சை மேற்கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். சில தினங்களுக்கு முன்பே சூர்யா கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்த தகவலை அவரது தம்பி கார்த்தி தெரிவித்தார். தற்போது சூர்யாவின் நண்பரும் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட்டின் இயக்குநருமான ராஜசேகர் பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதை உறுதிப்படுத்தியுள்ளார் . மேலும் சூர்யா குணமாகப் பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதற்கிடையில், பாண்டி ராஜ் இயக்கும் சூர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு, சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. சூர்யா இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கோவிட் -19 க்கு எதிர்மறையாகச் சோதிக்கப்பட்ட பிறகு, சூர்யா விரைவில் படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது, மேலும் தயாரிப்பாளர்கள் சூர்யாவின் புகைப் படத்தைப் படப்பிடிப்பிலிருந்து பகிர்ந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார், இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

You'r reading கோவிட் 19 நெகடிவ்: சூர்யா படப்பிடிப்பில் பங்கேற்பது எப்போது? தொற்றிலிருந்து முற்றிலுமாக குணம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாஜக பெண் தலைவர் கொகைன் போதைப் பொருளுடன் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்