சக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படம் இயக்கியவர் தேசிங் பெரியசாமி. இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனியுடன் திருமண முடிச்சுப் போடத் தயாராகி விட்டார். 'கண்ணம் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நிரஞ்சனி முக்கிய வேடத்தில் நடித்தார்.இதில் துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர், பிரபல தொலைக் காட்சி தொகுப்பாளரான ரக்ஷன் நிரஞ்சனியின் ஜோடியாக நடித்தார்.தேசிய விருது திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் கனியை திருமணம் செய்து கொண்டவர் இயக்குனர் திரு. இவர் தேசிங் பெரிய சாமி மற்றும் நிரஞ்சனியின் திருமணம் பற்றிய அறிவிப்பை தனது சமூக வலைதளத்தில் தேசிங் பெரியசாமி மற்றும் நிரஞ்சனியின் பெயருடன் திருமண அழைப்பிதழின் படத்துடன் தகவல் பகிர்ந்து வெளிப்படுத்தினார்.

'கண்ணும் கண்ணம் கொள்ளையடித்தால்' படத்தில் நடிப்பதற்கு முன் வாய் மூடி பேசவும், சிகரம் தொடு, காவிய தலைவன் மற்றும் கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார் நிரஞ்சனி.நிரஞ்சனி, தேசிங்கு பெரியசாமி திருமணம் வரும் 25ம் தேதி புதுச்சேரியில் நடக்கவுள்ளது. முன்னதாக நிரஞ்சை சக தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டி நடத்தினார். தோழிகள் எல்லோரும் கருப்பு டி ஷர்ட் டிரஸ்கோட் அணிந்து பார்ட்டியில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் நிரஞ்சனி சகோதரி விஜய லட்சுமி, கனி ஆகியோரும் கலந்துகொண்டனர். பார்ட்டி படங்களை விஜயலட்சுமி நெட்டில் பகிர்ந்திருக்கிறார்.

You'r reading சக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபாஸ் படத்தில் நடிக்கிறார் அமிதாப்பச்சன்.. சீனியர் இயக்குனர் படக் குழு கெய்டு ஆகிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்