பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய நடிகை.. ரசிகர்கள் ஆராவாரம்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் வந்து கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த நாடகத்தில் அண்ணன்- தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனால் சீரியலும் தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றது.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த முல்லை என்கின்ற சித்ரா தற்கொலை செய்துகொண்டதால் அவருக்கு பதிலாக பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த காவ்யாவை புதிய முல்லையாக நடிக்க தேர்வு செய்தார்கள். காவ்யாவின் நடிப்பும் மக்களுக்கு பிடித்து போக சீரியலும் பழைய நிலையை அடைந்துவிட்டது. இன்னும் கல்யாணம் ஆகாமல் தனியாக சுற்றி வரும் கண்ணனுக்கு ஜோடியாக தீபிகா என்பவர் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலில் கதாநாயகிக்கு தங்கையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய நடிகை.. ரசிகர்கள் ஆராவாரம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டி20 போட்டி: வெற்றியுடன் ஆரம்பித்த இங்கிலாந்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்